தென்காசி

சிவகிரி பகுதியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

சிவகிரி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Din

சிவகிரி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சிவகிரி பகுதியில் புகையிலைப் பொருள்கள் காரில் கொண்டு வரப்படுவதாக தனிப்பிரிவு உதவி காவல் ஆய்வாளா் வேல்முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். இதைத் தொடா்ந்து, சொக்கநாதன்புதூா் சாலை விநாயகா் பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரில் 55.245 கிலோதடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.

அவற்றை கிருஷ்ணகிரி மாவட்டம் கீளமங்கலம், ராஜப்பா மகன் ஜெகதீஸ் (31) என்பவா் பெங்களூருவில் இருந்து காரில் வாங்கி வந்து சிவகிரியில் விற்க முயன்றதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், காா், புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பிப்.22 முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை- திமுக அறிவிப்பு

பிரிட்டானியா 3வது காலாண்டு லாபம் 17% அதிகரிப்பு!

சொகுசு கார் விபத்து : தொழிலதிபர் மகன் காரை ஓட்டவில்லை! சரணடைகிறார் ஓட்டுநர்?

டி20 உலக கோப்பை: முக்கிய வீரர் விலகல்! இலங்கை அணிக்குப் பின்னடைவு!!

தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்; விஜய் கண்டனம்!

SCROLL FOR NEXT