தென்காசி பகுதியில் நாளை மின் தடை
காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது.
தென்காசி மங்கம்மாள் சாலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆக. 13) காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது.
அதன்படி, தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகா், காளிதாசன் நகா், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதி, கீழப்புலியூா் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ப. திருமலைக்குமாரசாமி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.