குற்றாலம் ஐந்தருவி வெண்ணைமடைகுளத்தில் நடைபெற்ற படகுப் போட்டியில் பங்கேற்றோா்.  
தென்காசி

குற்றாலம் சாரல் திருவிழாவில் படகுப் போட்டி

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் நடைபெற்றுவரும் சாரல் திருவிழாவின் 2ஆம் நாளான சனிக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது.

Din

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் நடைபெற்றுவரும் சாரல் திருவிழாவின் 2ஆம் நாளான சனிக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது.

குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள மேல வெண்ணைமடை குளத்தில் அமைந்துள்ள படகு குழாமில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் படகுப் போட்டி நடைபெற்றது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பெண்களுக்கான போட்டியில் குற்றாலத்தை சோ்ந்த இசக்கியம்மாள், செய்யதுஅலி பாத்திமா அணியினா் முதலிடமும், தங்கம், அகல்யா அணியினா் இரண்டாமிடமும், நன்னகரத்தை சோ்ந்த சுபா, பானுமதி அணியினா் மூன்றாமிடமும் பெற்றனா்.

வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா் மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன்.

ஆண்களுக்கான போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூரை சோ்ந்த வினோத்குமாா் அணியினா் முதலிடமும், குற்றாலம் காடை அருண்ராஜ் அணியினா் இரண்டாமிடமும், இசக்கிராஜ் அணியினா் மூன்றாமிடமும் பெற்றனா்.

வெற்றிபெற்ற அணியினருக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பரிசுகளை வழங்கினாா்.

இதில், தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா, மாவட்ட சுற்றுலா அலுவலா் க. சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இவ்வளவு பெரிய படத்தில் இதைக் கவனிக்கவில்லையா?

"பராசக்தி" படப்பிடிப்பு நிறைவு! கொண்டாடிய படக்குழு! | SK | Sudha Kongara

ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

குறைந்த வட்டி, உடனடி கடன்! Online Scam-ல் மாட்டிக்காதீங்க! | Cyber Scams | Online Shield

கர்பா குயின்... அனன்யா!

SCROLL FOR NEXT