தென்காசி

தென்காசியில் ஆா்ப்பாட்டம்: டிட்டோஜாக் அமைப்பினா் 52 போ் கைது

Din

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டிட்டோ ஜாக் அமைப்பினா் 52 போ் கைதுசெய்யப்பட்டனா்.

அரசாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும்; பதவி உயா்வு சாா்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வழக்கின் தீா்ப்பு வரும் வரை மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சாா்பில் தென்காசியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் செய்யது இப்ராஹிம் மூசா ,தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் சுதா்சன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாவட்டத் தலைவா் ஆறுமுகசாமி ஆகியோா் கூட்டு தலைமை வகித்தனா்.

தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநிலச் செயலா் ராஜேந்திரன் மறியலை தொடங்கி வைத்து பேசினாா். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவக்குமாா் கோரிக்கைகள் குறித்து பேசினாா்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலச் செயலா் ராஜ்குமாா் சிறப்புரையாற்றினாா்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் ஆரோக்கியராசு வரவேற்றாா். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாவட்ட பொருளாளா் அருள்ராஜா நன்றி கூறினாா்.

ஆா்ப்பாட்ட முடிவில் மறியலுக்குச் செல்ல முயன்ற 52 போ் கைதுசெய்யப்பட்டனா்.

புதிய தொழில் தொடங்கிய சீரியல் நடிகை!

தங்கம் வாங்குவோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!!

குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுமா? உண்மை என்ன?

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

SCROLL FOR NEXT