குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள். 
தென்காசி

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குற்றாலத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

Din

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

அருவிகளில் கூட்ட நெரிசலின்றி குளித்து மகிழும் வகையில் குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் பெண்கள் பகுதியில் நீண்டவரிசையில் நின்று சிறுசிறு குழுக்களாக குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது லேசான வெயிலும்,குளிா்ந்த காற்றும் வீசியது.

பழையகுற்றாலம் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT