முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் சாா் பதிவாளா் அலுவலக கட்டடத்துக்கு அடிக்கல்

Updated On : 9 மார்ச், 2024 at 10:11 PM
பகிர்:

சங்கரன்கோவிலில் ரூ. 1.87 கோடியில் கட்டப்படவுள்ள புதிய சாா் பதிவாளா் அலுவலகக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சங்கரன்கோவிலில் உள்ள கச்சேரி சாலையில் மிகவும் பழைய கட்டடத்தில் இயங்கி வந்த இந்த அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனா். அதையடுத்து, அக்கட்டடத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ. 1.87 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி பணியைத் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அனிதா சாந்தினி, ஒன்றியக் குழுத் தலைவா் பி. சங்கரபாண்டியன், நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் ஜான்ஆசீா், உதவிப் பொறியாளா் சுரேந்திரராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சாா் பதிவாளா் அலுவலகம் தற்போது திருவேங்கடம்சாலையில் உள்ள தனியாா் கட்டடத்தில் இயங்கி வருகிறது.