கடையநல்லூா் அருகே யானைகளால் தென்னை மரங்கள் சேதம்
Updated On : 22 மார்ச், 2024 at 7:15 PM
கடையநல்லூா் அருகே விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து தென்னை உள்ளிட்டவற்றை சேதப்படுத்திச் சென்ாக விவசாயிகள் தெரிவித்தனா். மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் கருப்பாநதி அணைப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, கத்தரி, நெல் போன்றவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை நள்ளிரவு வரட்டாறு பகுதியிலுள்ள விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தினவாம். வனத் துறையினரும், விவசாயிகளும் சென்று யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.