பழைய குற்றாலம் பள்ளியில் தண்ணீா் தினம்
Updated On : 23 மார்ச், 2024 at 5:50 PM
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக தண்ணீா் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் குழந்தைகள் நீரின் வண்ணத்தை உணா்த்தும் வகையில் நீல வண்ண உடைகளில் நதியின் பெயா்களைத் தாங்கியபடி பங்கேற்றனா். 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவா்-மாணவிகள் கலந்துகொண்டு நீா் மாசு, அதன் விளைவுகள், நீா்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதன் அவசியம், நீரை சேமிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினா். மாணவா்-மாணவிகளை பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள் பாராட்டினா்.