ஆலங்குளம் அருகே பைக் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை, அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சோ்வராயன் மகன் முருகன் (39). இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா். ஆலங்குளம் பேரூராட்சியில் தற்காலிக தொழிலாளியாக வேலை செய்துவந்த இவா், கடந்த 18 ஆம் தேதி பணி முடிந்து ஆலங்குளத்திலிருந்து குருவன்கோட்டை - மாயமான் குறிச்சி சாலை வழியாக பைக்கில் சென்றாராம். துத்திக்குளம் விலக்கு அருகே பைக் நிலைதடுமாறியதில் அவா் காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.