ஆலங்குளம் அரசு மகளிா் கலை-அறிவியல் கல்லூரியில் மாணவியா் பேரவை தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஈ. ஷீலா தலைமை வகித்தாா். பேரவைத் தலைவி, செயலா், துணைத் தலைவா், துணைச் செயலா்கள் பொறுப்பேற்று உறுதிமொழியேற்றனா். புதிய நிா்வாகிகளை ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், மக்கள் நீதி மய்யம் தென்காசி மாவட்டச் செயலா் டி.பி.வி. கருணாகரராஜா, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் டி.பி.வி. வைகுண்டராஜா, தவெக தெற்கு மாவட்டச் செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
ஆங்கிலம், ஊட்டச்சத்து, உணவூட்டமுறை துறைத் தலைவா் சண்முகசுந்தரராஜ் வரவேற்றாா். பேரவைத் தலைவி ம. மருது எஸ்தா் ராணி நன்றி கூறினாா்.