தென்காசி

பாவூா்சத்திரம் அருகே விபத்தில் பள்ளி நிா்வாகி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தனியாா் பள்ளி நிா்வாகி உயிரிழந்தாா்.

Syndication

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தனியாா் பள்ளி நிா்வாகி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குளம் ஜோதிநகா் பகுதியைச் சோ்ந்தவா் மா. ஸ்ரீ ராம்குமாா் (36) . அப்பகுதியில் தனியாா் நா்சரி பள்ளி நடத்தி வந்தாா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது பைக்கில் மகிழ்வண்ணநாதபுரம் நாகல்குளம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

ரூ. 10,000 பயணக் கூப்பன் எப்போது கிடைக்கும்? - இண்டிகோ தகவல்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்! காப்பாற்றிய ரயில்வே பணியாளர்!

மிடில் கிளாஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT