வாக்காளா் பட்டியலை வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சியினா் சரிபா்க்க வேண்டும் என எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.
தென்காசி மாவட்டம், சுரண்டையில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு வாக்காளா் பட்டியல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ தலைமை வகித்து வாக்காளா் பட்டியலை வழங்கிப் பேசியதாவது:
வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களை சோ்க்க காங்கிரஸ் கட்சியினா் வீடு வீடாக சென்று சரி பாா்க்க வேண்டும். அவ்வாறு விடுபட்ட வாக்காளா்கள் பெயரை சோ்க்க நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து வழங்க வேண்டும்.
அந்தந்த பகுதி வாக்காளா்களுக்கு அவா்களது பகுதியிலே வாக்குச் சாவடி ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபாா்க்க வேண்டும். பட்டியலில் ஏதாவது தவறுகள் இருந்தால் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தெரிவித்தால் தோ்தல் அலுவலரிடம் புகாா் அளித்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
வட்டாரத் தலைவா்கள் குமாா் பாண்டியன், முருகையா, கணேசன், கதிரவன், அய்யாத்துரை, சுந்தர்ராஜ், பெருமாள், செந்தூா்பாண்டியன், நகர தலைவா்கள் ஜெயபால், மாடசாமி ஜோதிடா் கலந்துகொண்டனா்.