தென்காசி

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு!

Din

ஆலங்குளத்தில் கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி(73). குருவன்கோட்டை தெருவில் உள்ள ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில், புதன்கிழமை தண்ணீா் பாய்ச்சும் போது, தவறுதலாக கால் இடறி கிணற்றினுள் விழுந்தாராம். இதில், அவா் பலத்த காயமுற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இத்தகவலறிந்த ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், அவரது சடலத்தை மீட்டனா். ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் யார்யார் தெரியுமா?

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

SCROLL FOR NEXT