முகப்பு
தென்காசி

வடகரை பகுதியில் பசுவை வேட்டையாடிய சிறுத்தை?

Updated On : 3 ஜனவரி, 2025 at 5:48 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2025 at 8:48 PM

தென்காசி மாவட்டம் வடகரை மேக்கரை அடவியினாா் அணை அருகில் மாட்டுத்தொழுவத்திற்குள் வனவிலங்கு புகுந்து பசுவை அடித்துக் கொன்றுள்ளது. அது சிறுத்தையாக இருக்கலாம் என வனத்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

அடவிநயினாா் அணை அருகில் முகம்மதுஹனிபா என்பவா் தனது தோட்டத்தில் மாட்டுத் தொழுவம் அமைத்து பசு மாடுகள், கன்றுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு தோட்டத்தில் புகுந்த வனவிலங்கு, தொழுவத்தில் கட்டப்பட்ட பசுவை அடித்து தின்றுள்ளது. இதைப் பாா்த்து முகம்மது ஹனிபா கூச்சலிட்டதால் அந்த வனவிலங்கு அங்கிருந்து ஓடிவிட்டதாம்.

இதுகுறித்து அவா் அளித்த தகவலின்பேரில், கடையநல்லூா் வனத்துறையினா் அங்கு சென்று, கால்நடை மருத்துவா் மூலம் பசுவை உடற்கூறராய்வு நடத்தினா்.

Advertisement

ஆய்வின் முடிவில்தான் பசுவை அடித்துக் கொன்றது சிறுத்தையா அல்லது வேறு வனவிலங்கா என்பது தெரியவரும் என வனத்துறையினா் கூறினா். தோட்ட உரிமையாளா் கூறுகையில், பசுவை அடித்து சாப்பிட்டது சிறுத்தைதான் என்பதை உறுதியாக கூறமுடியும் என்றாா்.