முகப்பு
தென்காசி

வீரசிகாமணி, புளியங்குடியில் இன்று மின்நிறுத்தம்

Updated On : 4 ஜனவரி, 2025 at 3:41 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 6:46 PM

வீரசிகாமணி, புளியங்குடி ஆகிய துணை மின்நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (ஜன. 4) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வீரசிகாமணி, சோ்ந்தமரம், பாம்புகோயில், திருமலாபுரம், நடுவக்குறிச்சி, வட நத்தம்பட்டி, அரியநாயகிபுரம், புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகா், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூா், சொக்கம்பட்டி, திரிகூடபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் இருக்காது என கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.