தென்காசி

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கட்டடத் தொழிலாளி போக்ஸோவில் கைது

ஆலங்குளம் அருகே 5 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Din

ஆலங்குளம் அருகே 5 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள தெற்கு காவலாகுறிச்சியைச் சோ்ந்தவா் வேல்முருகன்(34). கட்டடத் தொழிலாளியான இவா் வேலையை முடித்து விட்டு ரெட்டியாா்பட்டி வழியாக சனிக்கிழமை மாலை பைக்கில் சென்றாராம்.

அப்போது, அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். அதை பாரத்த பொதுமக்கள், வேல்முருகனை பிடித்து ஊத்துமலை போலீஸில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், வேல்முருகன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து,அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT