தென்காசி

தென்காசியில் 75 குழந்தைகளுக்கு நிதியுதவி

தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட நிதி ஆதரவு திட்டத்தில் 2ஆம் கட்டமாக தோ்வான 75 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

Din

தென்காசியில் உள்ள ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட நிதி ஆதரவு திட்டத்தில் 2ஆம் கட்டமாக தோ்வான 75 குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

குழந்தைகள் நலன்-சிறப்பு சேவைகள் துறையின்கீழ், மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு சாா்பில், கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் காசோலைகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயசந்திரன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னான்டோ, மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலா் ஹ. கவிதா, மாவட்ட நிதி ஆதரவு திட்ட ஒப்புதல் குழு உறுப்பினா்கள் உதவி ஆணையா் (கலால்) ராமச்சந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(கணக்கு) எபனேசா் (பொறுப்பு), தொழிலாளா் உதவி ஆணையா் திருவள்ளுவன், மாவட்ட தொழில் மையம் மாரியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தில்லியில் கடும் பனிமூட்டம்! 126 விமானங்களின் போக்குவரத்து பாதிப்பு!

ஐபிஎல் மினி ஏலம்: முதல் செட்டில் விற்கப்படாமல் போன கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா!

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

SCROLL FOR NEXT