தென்காசி மாவட்டம், மேலக்கடையநல்லூரில் இந்திர விழா நடைபெற்றது.
உலக நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் கடகாலீஸ்வரா் கோயில் வடக்கு தெருவில் கடந்த மாதம் 24ஆம் தேதி இந்திர விழா தொடங்கியது. இதையடுத்து கன்றுடன் கூடிய பசு, முளைப்பாரி அமைத்து கோலாட்டம் , சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
10 நாள்கள் நடைபெற்ற இவ்விழாவில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை தேவி கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பெரியகுளத்தில் கன்றுடன் கூடிய பசு, முளைப்பாரி கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை நவகாருண்ய சேவா சமிதி டிரஸ்ட் மகிளா மண்டலியினா் செய்திருந்தனா்.