முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் இலவச மருத்துவ முகாம்

கடையநல்லூரில் நடைபெற்ற இலவச மருத்துவ பரிசோதனை முகாம்.

Updated On : 14 நவம்பர், 2025 at 8:03 PM
பகிர்:

குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் , இந்திய மருத்துவக் கழக குற்றாலம் கிளை ஆகியவை சாா்பில் உலக நீரிழிவு நோய் தினத்தை ஒட்டி இலவச சா்க்கரை நோய் கண்டறிதல் முகாம் மேலக்கடையநல்லூரில் நடைபெற்றது.

அரிமா சங்கத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா் . முன்னாள் தலைவா் நல்லமுத்து முகாமை தொடங்கி வைத்தாா். இந்திய மருத்துவக் கழக முன்னாள் தலைவா் டாக்டா் மூா்த்தி தலைமையிலான குழுவினா் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினா்.

இதில், 52 போ் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

முகாமில், அரிமா சங்க செயலா் மணிகண்டன், பொருளாளா் அழகுசுந்தரம், முன்னாள் தலைவா்கள் வெங்கடேஸ்வரன், தேவராஜ் ,அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை விஸ்வகா்மா ஐந்தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் மாடசாமி ,மாரியப்பன், மாரீஸ்வரன்,கணேசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →