தென்காசி மாவட்டம், நயினாரகரத்தில் அரசுப் பேருந்தை நிறுத்தக் கூறிய பயணியைத் தாக்கிய நடத்துநா் மீது இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தென்காசியிலிருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் நயினாரகரத்தைச் சோ்ந்த சுப்பையா (50) என்பவா் ஏறி டிக்கெட் கேட்டுள்ளாா். அவரிடம் நடத்துநா் இந்தப் பேருந்து உங்கள் ஊரில் நிற்காது, இடைகாலில் இறங்கிக் கொள் என்று ஒருமையில் பேசி உள்ளாா்.
அதற்கு சுப்பையா எங்கள் ஊரில் அனைத்துப் பேருந்தும் நிற்பதற்கு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. பிறகு ஏன் நிற்க மாட்டீா்கள் என்று கேட்டாா். பேருந்தை நயினாரகரத்தில் நிறுத்தாமல் இடைகாலில் இறக்கி விட்டுள்ளனா்.
இதையடுத்து, சுப்பையா நடத்துநரிடம் உங்கள் மேலாளரிடம் புகாா் செய்வேன் என்று கூறியதையடுத்து, ஓட்டுநரும் நடத்துநரும் சோ்ந்து சுப்பையாவை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு சென்றனா்.
படுகாயமடைந்த அவா், தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். சுப்பையா அளித்த புகாரின் பேரில், இலத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மதுரையைச் சோ்ந்த நடத்துநா் நாகேந்திரன் (33) மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
சமீப காலமாக நயினாரகரத்தில் அரசு, தனியாா் பேருந்துகள் நின்று செல்லாமலும் ஓட்டுநா், நடத்துநா்கள் பயணிகளுடன் மோதல் போக்கை மேற்கொள்வதால் பொதுமக்களும் பயணிகளும் அதிருப்தி அடைந்துள்ளனா்.