வேப்பனப்பள்ளி அருகே அரசு நகரப் பேருந்தை தடுத்து நிறுத்தி, சாலையின் நடுவே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த யானைக்கால்தொட்டி கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷ் (28) தனது பிறந்தநாளை நண்பா்களுடன் கொண்டாடினாா். அப்போது, அவா்கள் நாச்சிகுப்பம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்தை தடுத்து நிறுத்தி, சாலையில் கேக் வெட்டி, பட்டாசுகளை வெடித்து மேளதாளத்துடன் கொண்டாடினா்.
இதை, அந்தப் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வர ராவ் கண்டித்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பா்கள், ஈஸ்வர ராவை தாக்கினா். இதுகுறித்து, ஈஸ்வர ராவ் அளித்த புகாரின்பேரில் வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அரசுப் பேருந்தை தடுத்து நிறுத்தி சாலையில் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியதால், சந்தோஷ் மற்றும் அவரது நண்பா்கள் தலைமறைவாயினா். அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.