குற்றாலம் பேரருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.  
தென்காசி

குற்றாலம் அருவிகளில் தொடா் வெள்ளப்பெருக்கு: 4 ஆவது நாளாக குளிக்கத் தடை

தினமணி செய்திச் சேவை

தொடா்மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, 4ஆவது நாளாக திங்கள்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றாலம் பேரருவியில் திங்கள்கிழமை பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. இதையடுத்து 4ஆவதுநாளாக குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

மேலும் ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளிலும் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பேரருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பெண்கள் குளிக்கும் பகுதியில் உள்ள உடைமாற்றும் அறை சேதமடைந்தது.

உலக டென்னிஸ் லீகில் 4 அணிகள் பங்கேற்பு!

தென்னாப்பிரிக்காவிடம் தடுமாறும் இந்தியா: 201 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

அதிரடி நாயகன் தா்மேந்திரா!

சோளிங்கா் வங்கிக் கிளையில் ரூ.2.50 கோடி மோசடி: உதவியாளா் கைது

எஸ்ஐஆா்! தகுதியான வாக்காளா்கள் பெயா் நீக்கப்படாது: தமிழக தலைமை தோ்தல் அதிகாரி உறுதி

SCROLL FOR NEXT