தென்காசி

சிவகிரி அருகே மது விற்க முயன்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே மது விற்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கணேசன் தலைமையில் போலீஸாா், சிவகிரி தென்கால் குளத்துக் கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்பொழுது அங்கே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

அதில், சிவகிரி கீழ மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்துமுருககுமாா் என்பதும், 24 மதுபாட்டில்களை விற்க வைத்திருந்ததும் தெரியவந்ததையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

வெடி மருந்துகளை பதுக்கியவா் கைது

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

வத்தலகுண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்

லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

SCROLL FOR NEXT