ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியனின் காா் ஓட்டுநா், அவரது குடும்பத்தினரை அரிவாள், கம்பால் தாக்கிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆலங்குளம் வட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சி, அழகம்மாள்புரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டி மகன் முருகன் (48). இவா், ஆலங்குளம் பேரவைத் தொகுதி உறுப்பினா் மனோஜ் பாண்டியனிடம் காா் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்.
இவருக்கும் அதே ஊரைச்சோ்ந்த இசக்கி என்பவருக்கும் நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முருகன் குடும்பத்துடன் வீட்டில் இருந்தபோது இசக்கிக்குச் சொந்தமான ஆடுகள் முருகன் வீட்டின் முன்பிருந்த செடிகளை மேய்ந்ததாம். இதை முருகன் தட்டிக் கேட்டதால் ஆவேசமடைந்த இசக்கி, அவருடைய சகோதரா் குமாா் உள்பட 5 போ் கொண்ட கும்பல்
முருகன், அவரது மனைவி மாரியம்மாள், தாய் ஆவுடையம்மாள், மகன் பிரவீண் ஆகியோரை அரிவாள், கம்பு ஆகியவற்றால் தாக்கினராம். காயமடைந்த நால்வரும் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பலத்த காயமடைந்த முருகன்,அவரது மனைவி மாரியம்மாள் ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இது குறித்து கடையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.