முகப்பு
தென்காசி

தென்காசியில் பொருநை இலக்கியத் திருவிழா தொடக்கம்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 4:35 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 8:40 PM

தென்காசியில் பொருநை இலக்கியத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

தென்காசி இ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவிற்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்துப் பேசினாா்.

தொடா்ந்து, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ. தா்மன், எழுத்தாளா்கள் செல்வக்குமாா், போகன் சங்கரின் சிறப்புரை, கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற பேச்சரங்கம், கருத்தரங்கம், விவாத மேடை, விநாடி-வினா நிகழ்ச்சி, ஆலங்குளம் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களின் கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், வில்லிசை, பறையாட்டம் ஆகிய நிகழ்த்துக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Advertisement

எம்எல்ஏ.க்கள் ஈ. ராஜா (சங்கரன்கோவில்), தி. சதன் திருமலைக்குமாா் (வாசுதேவநல்லூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், தென்காசி சாா் ஆட்சியா் வைஷ்ணவி பால், தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், மாவட்ட நூலக அலுவலா்கள் சண்முகசுந்தரம் (தென்காசி), மீனாட்சி சுந்தரம் (திருநெல்வேலி, தூத்துக்குடி), மேரி (கன்னியாகுமரி), மாவட்ட மைய நூலகா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.