முகப்பு
தென்காசி

செங்கோட்டையில் புதிய கட்டடங்கள் திறப்பு

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 1:51 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 8:11 PM

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 2 புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

கடையநல்லூா் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 13 லட்சத்தில் செங்கோட்டை நகராட்சி மேலூா் பகுதியில் நவீன உடற்பயிற்சிக் கூடம், பொது நூலக வளாகத்தில் ரூ. 10 லட்சத்தில் கூடுதல் கட்டடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இவற்றை, வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், செங்கோட்டை ஒன்றியச் செயலா் டாக்டா் சுசீகரன், நகரச் செயலா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement