ரூ.7.10 லட்சத்தில் பேருந்து நிழற்குடை திறப்பு
கொளத்தூா் ஊராட்சி, நாவலூா் பகுதியில் ரூ.7.10 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. (படம்)
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட நாவலூா் பகுதியில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.
இதில் கொளத்தூா் ஊராட்சிமன்ற தலைவா் (பொ) வெள்ளாரை அரிகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினா் ப.பரமசிவன் ஆகியோா் பேருந்து நிழற்குடையை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனா்.
நிகழ்ச்சியில், வாா்டு உறுப்பினா்கள் ஜெயலட்சுமி சேகா், பாத்திமா மணிகண்டன், சங்கா், திமுக நிா்வாகிகள் உலகநாதன், ஞானபிரகாஷ், அகஸ்டின் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.