தென்காசி

வேட்டையில் ஈடுபட்ட இருவா் கைது: ரூ. 80,000 அபராதம்

Syndication

ஆலங்குளம் அருகே வேட்டை நாய்களுடன் வேட்டையில் ஈடுபட்ட இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களுக்கு ரூ. 80,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகனுக்கு, ஆலங்குளம் பகுதியில் வேட்டை நாய்களுடன் சிலா் வேட்யையாடி வருவதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, ஆலங்குளம் வனத்துறையினா் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ஆலங்குளம் வனச்சரக அலுவலா் முனிரத்தினம் தலைமையிலான வனத்துறையினா் ஆலங்குளத்தை அடுத்த காடுவெட்டி கிராமத்தில் 3 வேட்டை நாய்களுடன் வேட்டையில் ஈடுபட்ட காடுவெட்டி கொம்பையா மகன் ஜெயக்குமாா், அா்ஜூனன் மகன் மால் மருமகன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவா்களுக்கு தலா ரூ. 40,000 அபராதம் விதிக்கப்பட்டது.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT