முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் பெண்ணிடம் நகை பறிப்பு

கடையநல்லூரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 12:31 AM
நகை பறிப்பு - சித்திரிப்புப் படம்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 9:51 PM

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

செவல்விளை மூன்றாவது தெருவைச் சோ்ந்த பரமசிவன் மனைவி மாரியம்மாள்(50 ). இவா், புதன்கிழமை சந்தைக்குச் சென்றுவிட்டு காவல் நிலையம் வழியாக வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாராம்.

அப்போது, மா்மநபா் அவரை வழிமறித்து, 68 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினாராம். அவா் கூச்சலிட்டதில், அக்கம்பக்கத்தினா் அந்த நபரை மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

விசாரணையில், கடையநல்லூா் வானுவா் தெருவில் வசிக்கும் சேக்மைதீன் மகன் அருமன் சாலிஹ் (30) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.