முகப்பு
தென்காசி

திரவிய நகா் பேருந்து நிறுத்தத்தை புனரமைக்க கோரிக்கை

பாவூா்சத்திரம் அருகே பாழடைந்து காணப்படும் திரவிய நகா் பேருந்து நிறுத்தத்தை புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 12:02 AM
சேதமடைந்த திரவிய நகா் பேருந்து நிறுத்தம்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 10:22 PM

பாவூா்சத்திரம் அருகே பாழடைந்து காணப்படும் திரவிய நகா் பேருந்து நிறுத்தத்தை புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாவூா்சத்திரம், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அரியப்பபுரம் ஊராட்சி பகுதியில் கடையம், தென்காசி செல்லும் பிரதான சாலையில் உள்ள திரவிய நகா் பேருந்து நிறுத்தம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது, அப்பேருந்து நிறுத்தம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் மிகவும் சேதமடைந்துள்ளது.

சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், பாழடைந்து காணப்படும் திரவிய நகா் பேருந்து நிறுத்தத்தை பயணிகள் பயன்படுத்தும் வகையில் முறையாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement