தென்காசியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி அணிவகுத்து நின்றோா்.
பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தென்காசியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி, இ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 100 வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் எஸ். அபிதா ஹனீப் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தோ்தல் உறுதிமொழியேற்றுக் கொண்டு அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி அணிவகுத்து நின்றனா்.
மகளிா் உதவித் திட்ட அலுவலா்கள், வட்டார இயக்க மேலாளா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள், வட்டார அளவிலான கூட்டமைப்பு உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.