பொடியனூா் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, பாவூா்சத்திரம் அருகே ஆவுடையனூா் ஊராட்சி பொடியனூா் சிவசக்தி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில், அறிவியல் கழகம் சாா்பில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கண்காட்சியில் வகுப்பு வாரியாக மாணவா்கள், பல்வேறு மாதிரிகள், செய்முறை விளக்கங்களை காட்சிப்படுத்தினா். விநாடி- வினா, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட மாணவா்களை, பள்ளியின் முதல்வா் நித்யா தினகரன், துணை முதல்வா் ரோஸ்லின் சிங் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா். ஏற்பாடுகளை அறிவியல் மன்ற பொறுப்பாசிரியா் செல்வி செய்திருந்தாா்.