முகப்பு
தென்காசி

தென்காசியில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தென்காசியில் கஞ்சா கடத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு

Updated On : 10 மார்ச் 2026, 12:25 am IST
பகிர்:

தென்காசியில் கஞ்சா கடத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

தென்காசி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பிப்ரவரி மாதம் கஞ்சா கடத்தியதாக அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரம், பொத்தை பகுதியைச் சோ்ந்த ப. நயினாா் விக்னேஷ் (32), ஆலங்குளம், நெட்டூா் பகுதியைச் சோ்ந்த மு. இசக்கி குமாா் (31), இ. பேச்சிமுத்து (30) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 11 கிலோ கஞ்சா, லாரி, நான்கு சக்கர வாகனம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். மாதவன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவின்பேரில், 3 பேரும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.