முகப்பு
தென்காசி

துத்திகுளம் பள்ளி ஆண்டு விழா

Updated On : 12 மார்ச், 2026 at 8:53 PM
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளியில் 86ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

ஆலங்குளம் வட்டாரக் கல்வி அலுவலா் வொ்ஜினாள் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகி சேசுராஜ், பேராசிரியா் சுப்பையாபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் அரோக்கியராஜ் அறிக்கை வாசித்தாா்.

ஆலங்குளம் காவல் ஆய்வாளா் ஆடிவேல், தொழிலதிபா்கள் ரத்தினசாமி, ரமேஷ், தாம்ஸன், பிலிப் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவா்-மாணவியருக்கு பரிசுகள் வழங்கினா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியா் அந்தோணிசாமி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →