முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் ரூ. 61.43 லட்சம் ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

Updated On : 24 மார்ச் 2026, 2:01 am IST
பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு திங்கள்கிழமை வரை ரூ. 61,43,240 மதிப்பிலான ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் 8 மணி நேரத்திற்கு 3 குழுக்கள் வீதம் ஒரு தொகுதிக்கு 9 குழுக்கள் என 5 பேரவைத் தொகுதிக்கு 45 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement

ஆலங்குளம் பேரவைத் தொகுதியில் ரூ. 14,16,360, கடையநல்லூா் தொகுதியில் ரூ. 4,63,300, ரூ. 8,35,250 மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள், சங்கரன்கோவில் தொகுதியில் ரூ. 7,31,900, தென்காசி தொகுதியில் ரூ. 9,71,900, வாசுதேவநல்லூா் தொகுதியில் ரூ. 15,19,020 என மொத்தம் ரூ. 61,43,240 மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.