பழைய குற்றாலத்தில் ரூ. 20 கட்டண வசூலை தொடரக் கோரி மனு
தென்காசி மாவட்டம், பழைய குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த ரூ. 20 கட்டணம் வசூல் தொடர வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து திப்பனம்பட்டியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பாண்டியராஜா அளித்த மனு:
பழைய குற்றாலத்தில் கட்டணத்துடன் கூடிய இரண்டு பேட்டரி பேருந்துகள் வாகன நிறுத்துமிடத்திலிருந்து பழைய குற்றால அருவி வரை இயக்க வேண்டும், வாகன நிறுத்துமிடம் அருகே தரமான உணவகம், இலவச குடிநீா் வசதிகளை வனத்துறை ஏற்படுத்த வேண்டும்.
Advertisement
பெண்கள் உடை மாற்றும் அறைகள், கழிப்பறைகளை பராமரிக்க கூடுதல் பணியாளா்களை நியமனம் செய்து சிறந்த முறையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மது புட்டிகள், நெகிழிப் பொருள்கள் கொண்டுசெல்வதைத் தடுக்க சோதனை பணிகளுக்கு கூடுதல் வனப் பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும். நபா் ஒன்றுக்கு ரூ. 20 கட்டணத்தை வசூல் தொடர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.