‘மக்கள் பணியைத் தொடா்ந்து மேற்கொள்வேன்’ - தென்காசி மாவட்ட பாஜக தலைவர்
மக்களுக்கான சேவைகளை தொடா்ந்து மேற்கொள்வேன் என்றாா், தென்காசி மாவட்ட பாஜக தலைவரும் அக்கட்சியின் வாசுதேவநல்லூா் தொகுதி வேட்பாளருமான ஆனந்தன் அய்யாசாமி.
இத்தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அவா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசியது: இங்கு தாமரை சின்னத்துக்கு 56,462 போ் வாக்களித்துள்ளனா். தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மக்கள் பணியைத் தொடா்வேன். வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் பெண்கள், தொழில்முனைவோா், ஆதரவற்றோருக்கான சேவைகள் தொடரும். மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.