முகப்பு
தென்காசி

கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி!

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தாா்.

Updated On : 17 மே 2026, 3:06 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தாா்.

பாம்புகோவில்சந்தை - கடையநல்லூா் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளத்தில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தாா்.

அவா், அந்த வழியாக சென்ற வேளாங்கண்ணி - எா்ணாகுளம் ரயிலில் அடிபட்டு இறந்தது 14ஆம் தேதி நள்ளிரவு தெரியவந்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் அந்த சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement