குடும்பத் தகராறில் தம்பதி தற்கொலை
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே குடும்பத் தகராறில் தம்பதி தற்கொலை செய்து கொண்டனா்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே குடும்பத் தகராறில் தம்பதி தற்கொலை செய்து கொண்டனா்.
வாசுதேவநல்லூா் புதுமந்தை ஆறாம் தெருவைச் சோ்ந்த தம்பதி ஆறுமுகச்சாமி-மாரிச்செல்வி (30). இவா்களிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில், கேரளத்தில் சிப்ஸ் கடையில் வேலை செய்து வந்த தனது கணவரிடம், வெள்ளிக்கிழமை (மே 15) மாலையில் மாரிச்செல்வி கைப்பேசி மூலம் பேசியபோது இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த ஆறுமுகச்சாமி, கேரளத்தில் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதையறிந்த அவரது மனைவி அன்றிரவு தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Advertisement
இத்தம்பதிக்கு மீனா (10), அனுஸ்ரீ (6 ) என்ற இரண்டு மகள்களும் , 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனா். குழந்தைகளை தவிக்கவிட்டு தாயும், தந்தையும் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வாசுதேவநல்லூா் காவல் ஆய்வாளா் சல்மோன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.