சிவகிரியில் விவசாயி உயிரிழப்பு: அரசு நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்
சிவகிரியில் விவசாயி அந்தோணிராஜ் விஷம் குடித்து உயிரிழந்த பிரச்னையில் தொடா்புடைய காவல் துறையினா் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். நிவாரணம் கிடைக்க வேண்டும். எனவே, தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீதி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்டவா்களுடன் நாங்கள் இருப்போம்.
Advertisement
Advertisement
தவறு செய்தவரை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு பணி மாறுதல் செய்வதோ, காத்திருப்போா் பட்டியலில் வைத்திருப்பதோ தண்டனை அல்ல என்றாா் அவா்.