முகப்பு
திருநெல்வேலி

சத்துணவு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா் நலச்சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 7 ஜனவரி 2021, 6:19 am IST
பகிர்:

தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா் நலச்சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சத்துணவு ஓய்வூதியா்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். சி, டி பிரிவு ஊழியா்களுக்கு வழங்குவது போன்று சத்துணவு ஓய்வூதியா்களுக்கும் பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ரூ.7,850 மற்றும் அகவிலைப்படிகள் இணைத்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாநில துணை அமைப்பாளா்கள் எம்.ஆறுமுகம், ஏ.சுப்புலட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், மாநில துணை அமைப்பாளா் நவநீதகிருஷ்ணன், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளா் தெஆறுமுகம், ரேவதி, முத்துசாமி, செல்லத்துரை, எஸ்.என். முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.