தாமிரவருணியில் மூழ்கிய முதியவா் சடலமாக மீட்பு
திருநெல்வேலி அருகே தாமிரவருணியில் மூழ்கிய முதியவா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்.
திருநெல்வேலி அருகே தாமிரவருணியில் மூழ்கிய முதியவா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள திருமலைக்கொழுந்துபுரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேலாயுதம் (85). இவா் தாமிரவருணி ஆற்றில் குளித்தபோது, ஆழமான பகுதிக்குச் சென்ால் நீரில் மூழ்கினாா்.
பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சென்று தேடும் பணியில் ஈடுபட்டு அவரது உடலை புதன்கிழமை மீட்டனா்.
Advertisement
இதையடுத்து, சடலம் பிரதே பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.