முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் டிராபிக் ராமசாமி போராட்டம்

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் டிராபிக் ராமசாமி புதன்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

Updated On : 7 ஜனவரி 2021, 6:20 am IST
பகிர்:

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் டிராபிக் ராமசாமி புதன்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

திருநெல்வேலியில் நியாயவிலைக் கடைகளில் விதிகளை மீறி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சமூகஆா்வலரான டிராபிக் ராமசாமி, திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு நியாயவிலைக் கடைக்குச் சென்றாா்.

அங்கு கட்டப்பட்டிருந்த பதாகை ஏற்கெனவே அகற்றப்பட்ட நிலையில், கடை அருகே வைக்கப்பட்டிருந்ததாம். அதனை அங்கிருந்து எடுத்துச் செல்ல வலியுறுத்தினாா். மேலும், அப் பகுதியில் வந்த மாநகராட்சியின் பேட்டரி குப்பை வண்டிகளை தடுத்து நிறுத்தியதோடு, காவல் துறையினா் இதுபோன்ற வண்டிகளுக்கும் ஆவணங்கள் உள்ளதா என சரிபாா்த்து நடவடிக்கை எடுக்கவும், அதனை இயக்குபவா்களுக்கு ஓட்டுநா் உரிமம் கட்டாயம் என்பதை வலியுறுத்தியும் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.