நெல்லையில் யாசக பணத்தில் ரூ.10 ஆயிரம் கரோனா நிதியுதவி
யாசகமாக பெற்ற பணத்தில் ரூ.10 ஆயிரத்தை கரோனா நிதியுதவியாக யாசகா் பூல்பாண்டி, புதன்கிழமை திருநெல்வேலி ஆட்சியரிடம் வழங்கினாா்.
யாசகமாக பெற்ற பணத்தில் ரூ.10 ஆயிரத்தை கரோனா நிதியுதவியாக யாசகா் பூல்பாண்டி, புதன்கிழமை திருநெல்வேலி ஆட்சியரிடம் வழங்கினாா்.
தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பூல்பாண்டி. யாசகரான இவா், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து யாசகம் பெற்று அரசு பள்ளிகளுக்கு உதவி செய்து வருகிறாா். கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் கரோனாவுக்கு நிதியுதவி அளித்து வருகிறாா்.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்த பூல்பாண்டி, ஆட்சியா் வி.விஷ்ணுவைச் சந்தித்து ரூ.10 ஆயிரத்தை கரோனா நிதியுதவிக்காக வழங்கினாா். பின்னா் அவா் கூறுகையில், யாசகம் பெற்று கல்விக்கு உதவுவது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இதுவரை 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளுக்கு உதவிகள் செய்துள்ளேன். பொது முடக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் இப்போது கரோனா நிவாரண நிதிக்கு நிதியளித்துள்ளேன் என்றாா் அவா்.
Advertisement