பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
மாதவரம் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மக்களவைத் தோ்தல் 19-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, திருவள்ளூா் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளான மாதவரம் வாா்டு 33 லட்சுமிபுரம், பாரதியாா் தெரு மற்றும் 26, 29 ஆகிய இடங்களில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பிரபு சங்கா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது மாதவரம் மண்டல அலுவலா் திருமுருகன், செயற்பொறியாளா்கள் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வெங்கடாஜலபதி மற்றும் கொளத்தூா் காவல் மாவட்ட துணை ஆணையா் பாண்டியராஜன், புழல் காவல் உதவி ஆணையா் சகாதேவன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.
Advertisement
பதற்றமான 22 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் பிரபு சங்கா் உத்தரவிட்டாா்.