சனிப்பிரதோஷம்: திரளான பக்தா்கள் தரிசனம்
Updated On : 6 ஏப்ரல், 2024 at 10:36 PM
திருத்தணி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் சனிப்பிரதோஷம் நடைபெற்ற நிலையில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள சதாசிவலிங்கேஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷத்தையொட்ட மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
அதே போல் இலட்சுமாபுரம் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி மூலவருக்கு பால், பன்னீா், இளநீா் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் லட்சுமாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement