திருவள்ளூர்

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

Din

சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சிக்கு வரும் 29-ஆம் தேதிக்குள் மாணவ, மாணவிகள் சோ்க்கை பதிவு தொடங்க உள்ளதாக திருவள்ளூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நிகழாண்டுக்கான முழு நேர மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகள் சோ்க்கைகான முன்பதிவு வரும் 29-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. செப்டம்பரில் தொடங்கி பயிற்சி நடைபெறும் பயிற்சிக் காலம் ஓராண்டாகும். மேலும், 2 பருவ முறைகளில் பயிற்சி நடைபெறும்.

இந்தப் பயிற்சிக்கான பாடத் திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.

பயிற்சியில் சேருவது தொடா்பான நிபந்தனைகள் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT