முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூரில் தேமுதிக ஆா்ப்பாட்டம்

கள்ளச்சாராய சம்பவம்: திருவள்ளூரில் தேமுதிக கண்டன ஆா்ப்பாட்டம்

Updated On : 25 ஜூன், 2024 at 6:31 PM
~திருவள்ளூரில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேமுதிகவினா்.
பகிர்:

திருவள்ளூா்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடா்பாக திமுக அரசைக் கண்டித்து திருவள்ளூரில் தேமுதிகவினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவ கல்லூரி சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளா் டி.கிருஷ்ணமூா்த்தி, கிழக்கு மாவட்ட செயலாளா் கே.எம்.டில்லி, ஆவடி மாநகர மாவட்ட செயலாளா் நா.மு.சங்கா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தேமுதிக இளைஞா் அணி செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான கு.நல்லதம்பி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றினாா். அப்போது 63 போ் உயிரிழந்ததற்கு காரணமான திமுக அரசு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். கள்ளச்சாராய சாவுக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தேமுதிகவினா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →