முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் நகராட்சி தொழிலாளி திடீா் மரணம்

Updated On : 20 மார்ச், 2024 at 10:46 PM
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 7:10 PM

திருவள்ளூா்: திருவள்ளூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டத்தில் கூலி வேலை செய்து வந்த தொழிலாளி நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சேலம் அருகே கவுண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (62). இவா் திருவள்ளூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டப் பணியில் கூலி வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் இருந்தவா்கள் அவரை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் மாரிமுத்து ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து அவரது மகன் மணி திருவள்ளூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement