முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் நகராட்சியில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு

Updated On : 24 மார்ச், 2024 at 7:20 AM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 9:30 PM

மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். நகராட்சி அலுவலகம் முன்பு அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி வண்ணக் கோலம் மிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா் தலைமையில் மக்களவைத் தோ்தலில் வாக்களிப்போம், அருகில் உள்ளவா்களிடம் எடுத்துக்கூறி 100 சதவீதம் வாக்களிப்போம் எனக் கூறி பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா். நிகழ்வில் நகராட்சி ஆணையா் சுபாஷிணி, நகராட்சிப் பொறியாளா் நடராஜ், சுகாதார அலுவலா் கோவிந்தராஜ், வருவாய் அலுவலா் கருமாரியப்பன் மற்றும் அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.